ஆப்நகரம்

பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இந்தியருக்கு 27½ ஆண்டு சிறை.!

பயங்கரவாத வழக்கில் அமெரிக்கவாழ் இந்தியருக்கு 27½ ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNN 8 Nov 2017, 2:58 pm
பயங்கரவாத வழக்கில் அமெரிக்கவாழ் இந்தியருக்கு 27½ ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil indian gets 27 5 years in us jail
பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இந்தியருக்கு 27½ ஆண்டு சிறை.!


இந்தியாவை சேர்ந்த யாஹ்யா பாரூக் முகமது(39), அமெரிக்காவில் ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில் 2002-04 ஆண்டுகளில் பொறியியல் படித்தார். பின் 2008-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்ணை மணந்து கொண்டார்.

இவர் தனது சகோதரர் இப்ராகிம் முகமது மற்றும் ஆசிப் அகமது சலீம், சுல்தான் ரூம் சலீம் ஆகிய 3 பேருடன் சேர்ந்து அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாகியுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் அவரது, அழைப்பை ஏற்று, ஏமனுக்கு சென்று பல்லாயிரகணக்கான டாலர் நிதியை பயங்கரவாத செயல்களுக்கு அளித்ததாக பாரூக் மேல் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜாக் ஜவ்ஹாரியை கொலை செய்ய சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பாரூக் முகமது ஒப்புக்கொண்டார். மற்ற மூவரும் ஒப்புக்கொள்ளமால் எதிர் வழக்காட முன்வந்துள்ளனர்.

இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட யாஹ்யா பாரூக் முகமதுவுக்கு 27½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனை காலம் முடிந்ததும், பாரூக் கேட்டுக்கொண்டதுபோல இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி