ஆப்நகரம்

இந்திய டாக்சி டிரைவரின் மீது ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல்..!

இந்தியாவைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் மீது ஆஸ்திரேலியாவில் நிறவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

TNN 22 May 2017, 4:50 pm
இந்தியாவைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் மீது ஆஸ்திரேலியாவில் நிறவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil indian taxi driver assaulted abused in australia
இந்திய டாக்சி டிரைவரின் மீது ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல்..!


இந்தியாவைச் சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் ஆஸ்திரேலியாவில் டாக்சி ஓட்டுநராக பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டே, விருந்தோம்பல் குறித்த பட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது டாக்சியில், ஒரு ஜோடி பயணித்துள்ளது.

அப்போது பெண் பயணிக்கு வாந்தி வருவது போல் இருந்துள்ளது. இதனை கவனித்த பிரதீப் சிங்,” வாந்தி எடுப்பதாக இருந்தால் வண்டியிலிருந்து கீழே இறங்கி விடுங்கள். ஒருவேளை டாக்சிக்குள் வாந்தி எடுத்தால், அதனை சுத்தப்படுத்துவதற்கான கட்டணத்தை நீங்கள்தான் செலுத்த வேண்டியிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ஜோடி, பிரதீப் சிங்கை சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் தகாத வார்த்தைகளால் இந்தியர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அந்த ஜோடி பேசியுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரதீப் சிங், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஆஸ்திரேலிய காவல்துறையினர், டாக்சி டிரைவருக்கும் பயணிகளுக்கும் பணம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளதாகவும், அப்போது கோபத்தில் இந்தியர்களை பற்றி அவர்கள் திட்டியுள்ளார்களே தவிர, நிறவெறியினால் இந்த தாக்குதல் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

Indian taxi driver assaulted, abused in Australia

அடுத்த செய்தி