ஆப்நகரம்

Australia Residency :குடியுரிமைக்காக போலி திருமணம்: இந்தியர்களை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமைக்காக போலி திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலியா அரசு எச்சரித்துள்ளது.

Samayam Tamil 20 Nov 2018, 7:04 pm
ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமைக்காக போலி திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலியா அரசு எச்சரித்துள்ளது.
Samayam Tamil marriage


ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்துக்கும், அங்கு நிரந்தர குடியுரிமை பெற பலர் சட்ட விரோதமாக, அந்நாட்டவரை போலியாக திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் 32 வயதான ஒரு இந்தியர் இந்த புகாரில் சிக்கினார். இந்த விசாரணையில் இந்த உண்மை வெளியானது. இதை தொடர்ந்து இதனை தடுக்க தீவிரத்தை ஆஸ்திரேலியா அரசு காட்டி வருகின்றது.

போலி திருமணம்:
இதில் 4 ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள், குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரும் வகையில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட பார்ட்னர் விசாக்களை ஆஸ்திரேலியா ஆய்வு செய்ததில், 164 பார்ட்னர் விசா விண்ணப்பங்கள் போலியாக திருமணம் செய்து குடியேற திட்டமிட்டுள்ளதாக நிராகரித்துள்ளது.

சட்ட விரோதமாக போலி திருமணம் மூலம் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறலாம் என நினைப்பவர்களுக்கு ஆஸ்திரேலியா அரசு எச்சரித்துள்ளது.

இந்தியர்கள் அதிகம்:

இந்த குற்றத்தில் தெற்காசிய நாடுகள் தான் அதிகளவில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பொருளாதாரம், குடும்ப பிரச்னை, வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்