ஆப்நகரம்

இந்தோனேசியா பெருவெள்ளம்: 60 ஆயிரம் பேர் வீடிழப்பு, 43 பேர் பலி

ஜனவரி 10ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Samayam Tamil 3 Jan 2020, 6:17 pm
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil indonesia floods leave 43 people dead and 60000 displaced
இந்தோனேசியா பெருவெள்ளம்: 60 ஆயிரம் பேர் வீடிழப்பு, 43 பேர் பலி


இந்தோனேசியாவில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பேரிடரில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 60 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்தைத் தேடி குடிபெயர்ந்துள்ளனர்.

ஜெர்மனி உயிரியல் பூங்காவில் தீ விபத்து: 30 விலங்குகள் சாவு


ஜனவரி 10ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தைவான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தளபதி உட்பட 8 பலி

16 வயது சிறுவன் அறுந்து விழுந்திருந்த மின்கம்பியைத் தொட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். இதனால் அசம்பாவித நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியதால் பல ரயில்வே வழித்தடங்கள் முடங்கியுள்ளன. விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


போலந்தில் பறவைக் காய்ச்சலுக்கு 25,000 துருக்கியர்கள் மரணம்

தலைநகர் ஜகார்த்தாவில் ஏராளமான வீடுகள் இடித்துபோய்விட்டன. வீட்டை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இது 2013ஆம் ஆண்டுக்குப் பின் ஜகார்த்தாவில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய வெள்ளம் எனவும் அந்த அமைப்பு சொல்கிறது.

அடுத்த செய்தி