இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் மெராபி எரிமலை திடீரென புகையை கக்கி வருவது. இதனால் அப்பகுதியில் சூடான புகை மண்டலம் உருவாகி மேகம் போல காட்சியளிக்கிறது.
இந்த எரிமலையின் அடிவாரத்தில் வசிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புகை மண்டலம் மலையையே மறைக்கத் தொடங்கிவிட்டதால், எவ்வளவு தூரத்துக்கு புகை சூழ்ந்தது என்பது தெரியவில்லை.
புவியியல் பேரிடர் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, எரிமலையில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு புகை மண்டலம் மேகம் போல சூழ்ந்திருந்ததாக தெரியவருகிறது.
ஜாவா தீவில் உள்ள மகேலாங் மாவட்டத்தில் இந்த எரிமலை இருக்கிறது. பாதுகாப்பு கருதி மலை அடிவார மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில், எரிமலையில் இருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமே ஆபத்தில் இருப்பதாக புவியியல் பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.
மவுண்ட் மெராபி எரிமலை இருக்கும் பகுதியில் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் சுரங்கம் தொடர்பான செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த மலை ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் புகையை கக்கியது. ஆனால், அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
இதற்கு முன் 2010ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததில் 347 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சுமார் 20,000 கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த எரிமலையின் அடிவாரத்தில் வசிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புகை மண்டலம் மலையையே மறைக்கத் தொடங்கிவிட்டதால், எவ்வளவு தூரத்துக்கு புகை சூழ்ந்தது என்பது தெரியவில்லை.
புவியியல் பேரிடர் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, எரிமலையில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு புகை மண்டலம் மேகம் போல சூழ்ந்திருந்ததாக தெரியவருகிறது.
ஜாவா தீவில் உள்ள மகேலாங் மாவட்டத்தில் இந்த எரிமலை இருக்கிறது. பாதுகாப்பு கருதி மலை அடிவார மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில், எரிமலையில் இருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமே ஆபத்தில் இருப்பதாக புவியியல் பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.
மவுண்ட் மெராபி எரிமலை இருக்கும் பகுதியில் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் சுரங்கம் தொடர்பான செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த மலை ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் புகையை கக்கியது. ஆனால், அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
இதற்கு முன் 2010ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததில் 347 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சுமார் 20,000 கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டனர்.