இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி, நிலச்சரிவு, வெள்ளம், எரிமலை கொந்தளிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்களாலும், பேரிடர்களாலும் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பிரபல மவுண்ட் மெராபி நெருப்புக் குழம்பை கக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எரிமலைக்கு அருகில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மவுண்ட் சினாபுங் என்ற எரிமலை இன்று வானில் 3 கிலோமீட்டர் உயரத்துக்கு சாம்பலை கக்கியது பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடிக்கடி தனது வேலையை காட்டி வருகிறது.
தற்போது உயரமாக சாம்பலை கக்கியதால் வடக்கு சுமத்ராவில் இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும், மலையில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மக்கள் இருக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சினாபுங் எரிமலை வெள்ளை சாம்பலை கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பது தெரிகிறது.
இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 130 ஆக்டிவ் எரிமலைகள் இருக்கின்றன. மற்ற எந்த நாட்டை காட்டிலும் இந்தோனேசியாவில் மட்டுமே இவ்வளவு எரிமலைகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக அமைதியாக இருந்த சினாபுங் எரிமலை 2010ஆம் ஆண்டில் மீண்டும் வெடித்தது.
இந்நிலையில், மவுண்ட் சினாபுங் என்ற எரிமலை இன்று வானில் 3 கிலோமீட்டர் உயரத்துக்கு சாம்பலை கக்கியது பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடிக்கடி தனது வேலையை காட்டி வருகிறது.
தற்போது உயரமாக சாம்பலை கக்கியதால் வடக்கு சுமத்ராவில் இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும், மலையில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மக்கள் இருக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சினாபுங் எரிமலை வெள்ளை சாம்பலை கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பது தெரிகிறது.
இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 130 ஆக்டிவ் எரிமலைகள் இருக்கின்றன. மற்ற எந்த நாட்டை காட்டிலும் இந்தோனேசியாவில் மட்டுமே இவ்வளவு எரிமலைகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக அமைதியாக இருந்த சினாபுங் எரிமலை 2010ஆம் ஆண்டில் மீண்டும் வெடித்தது.