ஆப்நகரம்

சுமத்ரா தீவில் எரிமலை சீற்றம் எதிரொலி; விமானங்களை இயக்க தடை!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினாபங் எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் விமானங்களை இயக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Feb 2018, 1:07 pm
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினாபங் எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் விமானங்களை இயக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil indonesia raises aviation warnings after sumatra volcano emits ash cloud
சுமத்ரா தீவில் எரிமலை சீற்றம் எதிரொலி; விமானங்களை இயக்க தடை!


நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் இந்தோனேஷியாவில், ஏராளமான எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்த எரிமலைகள் சில சமயங்களில் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தும்.

அந்தவகையில், சுமத்ரா தீவில் உள்ள எரிமலை தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியின் நான்கு கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்துள்ள புகை மற்றும் சாம்பல் எரிமலையின் சுற்றுப்புற பகுதிகளில் 16000 அடி தூரம் வரை பரவியுள்ளது. எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்பதால் விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமானங்களை இயக்கக்கூடாது என அவுஸ்திரேலியாவிலுள்ள எரிமலை ஆய்வு மையம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி