ஆப்நகரம்

கடலில் விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவில் கடந்த வார இறுதியில் கடலில் விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 9:20 pm
இந்தோனேசியாவில் ஜனவரி 9ஆம் தேதியன்று ஜகார்டாவில் இருந்து புறப்பட்ட விமானம் திடீரென நடுவானில் மாயமானது. இதன்பிறகு, இந்த விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
Samayam Tamil Black box


இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தொடர்பான விவரங்கள் கருப்புப் பெட்டி வாயிலாக கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பிறந்தது எங்கே? சீனாவுக்கு பறக்கும் WHO விசாரணை குழு!
தலைநகர் ஜகார்டா கடற்கரை அருகே சில டைவர்களால் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி கிடைத்துவிட்டதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் புதி கர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருப்பு பெட்டி தேடுதல் பணி நடைபெற்றபோது, கடலில் ஒரு பகுதியில் பலமான சிக்னல்கள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர், சிதைந்த விமானத்தில் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் கருப்பு பெட்டியை டைவர்கள் கண்டுபிடித்து கொண்டுவந்தனர்.

கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு!
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை இந்தோனேசிய அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கருப்புப் பெட்டியில், விமானத்தின் வேகம், உயரம், திசை, ஊழியர்களின் உரையாடல்கள் உள்ளிட்டவை பதிவாகியிருக்கும். இவற்றை வைத்தே 90% விமான விபத்துகளுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

அடுத்த செய்தி