ஜகர்தா: கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இந்தோனேசியா கட்டடங்கள் குலுங்கின.
இந்தோனேசியாவின் பாலு தீவில் இருந்து 79 கி.மீ தென் கிழக்கே உள்ள பகுதியை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது புவி மட்டத்தில் இருந்து கடலுக்கு அடியில் சுமார் 9.1 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதுகுறித்த் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக, ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சமடைந்தனர். பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Very strong and shallow M6.8 earthquake hits Sulawesi #Indonesia #earthquake #sulawesi https://t.co/XlIbCuFg6G via @Strange_Sounds pic.twitter.com/ntQPrtAKdh— Strange Sounds (@Strange_Sounds) May 29, 2017 ஆனால் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடின்றி தவிக்கும் மக்களுக்கு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
A strong, shallow earthquake rocked Indonesia’s central Sulawesi province Monday evening, injuring at least three people and damaging some buildings and houses.
இந்தோனேசியாவின் பாலு தீவில் இருந்து 79 கி.மீ தென் கிழக்கே உள்ள பகுதியை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது புவி மட்டத்தில் இருந்து கடலுக்கு அடியில் சுமார் 9.1 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இதுகுறித்த் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக, ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சமடைந்தனர். பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Very strong and shallow M6.8 earthquake hits Sulawesi #Indonesia #earthquake #sulawesi https://t.co/XlIbCuFg6G via @Strange_Sounds pic.twitter.com/ntQPrtAKdh— Strange Sounds (@Strange_Sounds) May 29, 2017 ஆனால் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடின்றி தவிக்கும் மக்களுக்கு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
A strong, shallow earthquake rocked Indonesia’s central Sulawesi province Monday evening, injuring at least three people and damaging some buildings and houses.