ஆப்நகரம்

மீனவரிடம் சிக்கிய சீன ஆயுதம்: இந்தியாவுக்கு ஆபத்தா?

மீனவர் வலையில் சிக்கிய சீன ட்ரோனால் இந்திய கடற்படை வேவு பார்க்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.

Samayam Tamil 30 Dec 2020, 8:26 pm
இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் சீன நீர்மூழ்கி ட்ரோனை பிடித்துள்ளார். இவரிடம் சிக்கிய நீர்மூழ்கி ட்ரோன், சீன அரசால் நடத்தப்படும் சீன அறிவியல் அகாடமியால் உருவாக்கப்படும் நீர்மூழ்கி ட்ரோன்களை போல இருப்பதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Submarine drone


சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேறி மாகாணத்தை சேர்ந்த சேலயார் தீவுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இந்த நீர்மூழ்கி ட்ரோன் சிக்கியுள்ளது.

புதிய கொரோனாவை அழிக்குமா ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி?
இதைத்தொடர்ந்து, சேருதீன் அந்த ட்ரோனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் அதை இந்தோனேசிய ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த ட்ரோன் 7.4 அடி நீளம் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுபோன்ற ட்ரோன்கள் இந்தோனேசியாவில் கிடைப்பது முதல்முறையல்ல. ஏற்கெனவே மாசலேம்பு தீவுகள், ரியாவு தீவுகளில் நீர்மூழ்கி ட்ரோன்கள் சிக்கியுள்ளன.

மேற்கூறிய தீவுகளும், சேலயார் தீவும் தென்சீனக் கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளன. இந்திய பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை பதிவு செய்ய தீவிரமாக முயற்சித்து வருகிறது.

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது: ரஜினி பற்றி கஸ்தூரி
இந்த சூழலில், இந்திய கடற்படையின் கப்பல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வேவு பார்ப்பதற்காக இந்த சீன ட்ரோன்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி