ஆப்நகரம்

PPE உடையை கழற்றி கொரோனா நோயாளியுடன் நர்ஸ் உல்லாசம்; சிக்க வைத்த வாட்ஸ்-அப்!

மருத்துவமனை கழிவறையில் கொரோனா நோயாளியுடன் நர்ஸ் ஒருவர் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Dec 2020, 10:12 am
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகின்றது. வைரஸ் தொற்றுக்கு ஆளான நபர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா நோயாளியுடன் பாதுகாப்பு கவச உடைகளை அகற்றிவிட்டு நர்ஸ் ஒருவர் உறவில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் விஸ்மா அட்லெட் குவாரன்டின் மையம் அமைந்துள்ளது. இங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil Corona Sex in Indonesia


அங்கிருந்த நோயாளி ஒருவருடன் நர்ஸ்க்கு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் உடல் ரீதியான உறவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவமனை கழிவறைக்குச் சென்றுள்ளனர். அங்கு நர்ஸ் தனது PPE எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை அகற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருதாம்: காரணம் இதுதான்!

இதுபற்றி யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்த சூழலில் நர்ஸ் உடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்ட வாட்ஸ்-அப் ஸ்கிரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் நோயாளி பகிர்ந்துள்ளார். அதில் சில புகைப்படங்களும், வீடியோக்களும அடங்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் நர்ஸ் உடன் கொரோனா நோயாளி உறவில் ஈடுபட்டது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தால் மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி இந்தோனேஷிய மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜகர்தா மத்தியப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைரலாகும் வலிமை அஜித் குடும்ப போட்டோ: திருவிழாவை ஆரம்பித்த தல ரசிகாஸ்
இருவரும் அந்நாட்டு ஆபாச சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட நர்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. இவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி