ஆப்நகரம்

இந்தோனேசியா: படகு கவிழுந்து 20 தொழிலாளர்கள் பலி

பதம் தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 தொழிலாளர்கள் பலியாகினர்.

TNN 2 Nov 2016, 12:29 pm
ஜகர்த்தா: பதம் தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 தொழிலாளர்கள் பலியாகினர்.
Samayam Tamil indonesian police says at least 20 people dead after boat capsizes off island of batam
இந்தோனேசியா: படகு கவிழுந்து 20 தொழிலாளர்கள் பலி


இந்தோனேஷியா அருகே உள்ள பதம் தீவில் இருந்து, இன்று காலை படகு ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் மலேசியாவில் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் தங்கள் பணிக்கு திரும்புவதற்காக திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக படகு கவிழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த இந்தோனேஷிய கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 20 தொழிலாளர்கள் பலியாகினர். இதுவரை 40 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்திற்கு இந்தோனேஷிய அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

Indonesian police says at least 20 people dead after boat capsizes off island of Batam.

அடுத்த செய்தி