ஆப்நகரம்

கொரோனாவுக்கு பயந்து முழு விமானத்தையும் புக் செய்த இளம் பணக்காரர்!

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முழு விமானத்தையும் பதிவு செய்துள்ளார் இளம் பணக்காரர் ஒருவர்.

Samayam Tamil 8 Jan 2021, 6:06 pm
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து சேவைகள் இயங்கி வருகின்றன. எனினும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil Richard muljadi


டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய உத்தரவு!
இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக, விமானத்தில் உள்ள அனைத்து சீட்டுகளையும் பதிவு செய்து ஜாலியாக சென்றிருக்கிறார் இந்தோனேசியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவர்.

இந்தோனேசியாவை சேர்ந்த ரிச்சர்ட் முல்ஜாதி என்பவர் ஏற்கெனவே ஆடம்பரமாக செலவு செய்வதில் பிரபலமானவர். இவர் ஜகார்டாவில் இருந்து பாலிக்கு பட்டிக் ஏர் விமானத்தில் பயணித்துள்ளார். அவர் தான் விமானத்தில் பயணித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.



கொரோனா தொற்று காரணமாக, பாதுகாப்பு கருதி முழு விமானத்துக்கும் டிக்கெட் வாங்கியுள்ளார் ரிச்சர்ட் முல்ஜாதி. அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் விமானத்தின் சீட்டுகள் காலியாக இருப்பது தெரிகிறது.

விமானத்தில் உள்ள அனைத்து சீட்டுகளையும் பதிவு செய்ய எவ்வளவு செலவானது என்பது குறித்து அவர் தகவல் வெளியிடவில்லை. எனினும், பிரைவேட் ஜெட் புக்கிங் செய்வதை காட்டிலும் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்தது செலவை மிச்சப்படுத்தியுள்ளதாக ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் தானும் தனது மனைவியும் மட்டுமே விமானத்தில் பயணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருவர் மட்டுமே பயணித்ததாக பட்டிக் ஏர் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி