ஆப்நகரம்

சேலையில் கடத்தப்பட்ட ஐஸ்போதைப்பொருள் : அதிர்ந்துபோன இலங்கை அதிகாரிகள்

இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியே சட்டவிரோதமான முறையில் போதை பொருட்களை கடத்திய இந்தியரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 4 Oct 2019, 5:08 pm
இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியே சட்டவிரோதமான முறையில் போதை பொருட்களை கடத்திய இந்தியரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil WhatsApp Image 2019-10-04 at 15.01.51.


சென்னையிலிருந்து காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஒருவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு சுங்க வரித்துறையினர் அவரை சோதன செய்துள்ளனர். சுமார் 53 வயது மதிக்கத்தக்க அந்த வியாபாரி கொண்டு வந்த பைகளை சோதித்தபோது அதில் சில புடவைகள் இருந்தன. மேலும் சோதித்ததில், அந்த புடவைகளுக்குள் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருட்களை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



ஐஸ் போதைப்பொருள் என்று அழைக்கப்படுவது மெத்தாம் பிட்டமின் என்ற போதைப்பொருள். பார்ப்பதற்கு உடைக்கப்பட்ட ஐஸ்கட்டிகளின் தூள் வடிவம் போல் காட்சியளிப்பதால் ஐஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை ஸ்பீடு என்ற பெயராலும் குறிப்பது உண்டு.

சுமார் ஒரு கிலோ 70 கிராம் எடை கொண்ட இந்த போதைப்பொருட்கள் சுமார் ஒரு கோடியே ஏழு இலட்ச ரூபாய் மதிப்புள்ளது என்று விமான நிலைய சுங்க அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

சேலைக்குள் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட இந்த நூதன கடத்தலால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது..

அடுத்த செய்தி