ஆப்நகரம்

இந்தியாவுக்கு பணம் வழங்கியதாக நவாஸ் ஷெரீப் மீது புகார்

இந்தியாவுக்கு 4.9 மில்லியன் டாலர் தொகையை முறைகேடாக வழங்கியதாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 8 May 2018, 4:48 pm
இந்தியாவுக்கு 4.9 மில்லியன் டாலர் தொகையை முறைகேடாக வழங்கியதாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil Nawaz-sharif_-770x433


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் தனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு 4.9 மில்லியன் டாலர் தொகையை முறைகேடாக வழங்கினார் என்று புதிய குற்றச்சாட்டை அந்நாட்டு ஊடகங்கள் முன்வைத்துள்ளன.

இந்த தொகை இந்திய நிதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் இதனால் இந்திய அந்நியச் செலாவணி மதிப்பு உயர்வு கண்டது என்றும் அதே நேரத்தில் பாகிஸ்தான் அந்நியச் செலாவணி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அந்நாட்டு தேசிய கணக்கியல் பணியகம் (National Accountability Bureau) இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், உலக வங்கியின் இடப்பெயர்வு மற்றும் பணம் வழங்கல் ஆவணப்புத்தகம் 2016ல் இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீப் முறைகேடாக பணம் வழங்கியது பதிவாகியுள்ளதாவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி