ஆப்நகரம்

வரலாறு காணாத காட்டுத்தீ; அடுத்தடுத்து எரிந்து நாசமான வீடுகள் - அதிர்ச்சியில் மக்கள்!

ஓரேகான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளன.

Samayam Tamil 10 Sep 2020, 11:23 am
அமெரிக்காவின் வடமேற்கு பசுபிக் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஓரேகான். இங்குள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது வேகமாக பரவி வருவதால் தீயை அணைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வானில் மேலெழும்பும் தீயால் அருகிலுள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். அப்பகுதியில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருப்பதால் தீயை அணைக்கும் பணி சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில் அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் இடம்பெயர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil California Wild Fire


இதுபற்றி ஓரேகான் மாகாண ஆளுநர் கேட் ப்ரவுன் கூறுகையில், நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமடைந்துள்ளனர். மனித உயிர்களுக்கும், பொருட்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. ஓரேகானில் மூன்று பேரும், வாஷிங்டனில் பச்சிளங் குழந்தை ஒன்றும் காட்டுத்தீக்கு உயிரிழந்துள்ளனர். அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இம்மாகாண வரலாற்றில் இந்த காட்டுத்தீ மிக மோசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஓரேகான் மாகாணத்தின் பல இடங்கள் தீப்பற்றி எரியும் மண்டலங்களாக மாறியுள்ளன. இதனால் தீவிபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து முழுமையாக கணக்கிட முடியவில்லை என்று ஓரேகான் மாகாண தீயணைப்புத்துறை மார்ஷல் மரியானா தெரிவித்துள்ளார்.

அவர் அதுக்கு சரிபட்டு வரமாட்டார் - ட்ரம்பை கழுவி ஊற்றும் கமலா

இதேபோல் வாஷிங்டன் மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு வாஷிங்டனில் உள்ள சிறிய நகரைச் சூழ்ந்து கொண்ட காட்டுத்தீயால் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

பசுபிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் நிலவும் காலநிலையும் காட்டுத்தீ பரவுவதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. சியாட்டிலின் தெற்கே காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் 30 நிமிடங்கள் வாஷிங்டன் ஆளுநர் ஜே இன்ஸ்லீ ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு பேசிய அவர், வரலாறு காணாத காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் 4,80,000 ஏக்கருக்கு மேல் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.

வாஷிங்டனின் கிழக்கேவுள்ள விவசாய நகரான மால்டெனில் 80 சதவீத நிலங்கள் எரிந்து நாசமாகின. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி