ஆப்நகரம்

அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் ஐகேன் அமைப்பிற்கு நோபல் பரிசு!

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, ஒவ்வொரு ஆண்டும் அறிவியல், சமூக சேவை, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபர்களுக்கு ஒவ்வொரு வருடம் நோபல் பரிசு வழங்குவது வழக்கம்.

TNN 6 Oct 2017, 3:35 pm
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, ஒவ்வொரு ஆண்டும் அறிவியல், சமூக சேவை, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபர்களுக்கு ஒவ்வொரு வருடம் நோபல் பரிசு வழங்குவது வழக்கம்.
Samayam Tamil international campaign to abolish nuclear weapons wins the noble peace prize award 2017
அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் ஐகேன் அமைப்பிற்கு நோபல் பரிசு!


அதன்படி இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சர்வதேச அணு ஆயுத ஒழிப்பை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் இன்டர்நேஷனல் கேம்பைன் டு அபாலிஷ் நியூகிளியர் வெப்பன்ஸ் (ICAN) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அணு ஆயுதங்களைச் சோதித்து வருவதால், உலகளவில் ஒரு பதற்றம் நிலவி வருகிறது. மேலும், விருதை அறிவித்து பேசிய, நார்வீஜியன் நோபல் கமிட்டி தலைவர் ரீஸ் ஆண்டர்சன், “முன்னெப்பொழுதையும் விட தற்போது உலக அளவில் அணு ஆயுதங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன,” என்று கூறினார்.

கடந்த 20௦07 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ICAN அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக அணு ஆயுத ஒழிப்பிற்காக செய்த பணிகளை பாராட்டி இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. முன்னதாக, மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகரில் நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் வெளியிட்டிருந்தனர்.

International Campaign to Abolish Nuclear Weapons wins the Noble peace prize award 2017.

அடுத்த செய்தி