ஈரானில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 2 பேர் பலியாயினர். மேலும், 300க்கும மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஈரானின் மேற்கு மாகாணத்தில் இன்று மாலை சுமார் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுமார் 26 கிலோமீட்டர் சுற்றளவு வரையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் 500க்கும் மேற்பட்ட கட்டங்கள, குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், இரண்டு பேர் பலியாயினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ஈரானின் மேற்கு மாகாணத்தில் இன்று மாலை சுமார் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுமார் 26 கிலோமீட்டர் சுற்றளவு வரையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் 500க்கும் மேற்பட்ட கட்டங்கள, குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், இரண்டு பேர் பலியாயினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.