ஆப்நகரம்

அதிர்ச்சியில் அமெரிக்க ராணுவம், பதிலடியைத் தொடங்கியது ஈரான்!

ஈரான் மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம்வந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த விவகாரம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுலைமானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2020, 11:11 am
ஈரான் மக்களின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஈராக்கில் வைத்து கொலை செய்தது. காசிம் சுலைமானியின் இறப்புச் செய்தியை ஏற்க முடியாத ஈரான் மக்கள் அவரது உடலைப் பார்க்கக் குவிந்தனர்.
Samayam Tamil MW-HX939_iraq01_ZH_20200107191404


காசிம் சுலைமானி உடலின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ஈரான் மக்கள் பங்கேற்றிருந்தனர். பலர் கதறி அழுதனர். காசிம் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க நிச்சயம் உரியப் பதிலடியைப் பெறும் என அந்த கூட்டமே சூளுரைத்தது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது என அஞ்சப்படுகிறது.


காசிம் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை வெளியேறச் சொல்லி ஈராக் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. எனினும் அமெரிக்கா ஆக்கிரமித்திருந்த ராணுவ தளவாடங்களை விட்டு இப்போதுவரை வெளியேறவில்லை எனக் கூறப்படுகிறது.

போர் பதற்றம்; ஈரான், ஈராக் நாடுகளுக்கு ’நோ’ - மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த சூழலில், ஈரான் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஈரான் நேரப்படி நள்ளிரவு 1: 30க்கு நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈராக் டிவி சேணல்கள் கூறுகையில், “நாட்டை விட்டு விரைவில் கிளம்பவில்லை என்றால், அமெரிக்கர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்” எனக் கூறி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து இப்போதுவரை அமெரிக்க ராணுவ தலைமையான பெண்டகன் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலுக்கு முன் அமெரிக்கத் தரப்பு பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கும்போது, “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கையும் செய்யப்பட்டுவிட்டது” எனக் கூறியிருந்தது.

Ukraine Plane Crash 2020: 180 பயணிகளின் கதி என்ன ஆனது? பயங்கர விபத்தில் சிக்கிய உக்ரைன் விமானம்!

இப்போது இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கப் படைகள் கூறுகையில், “நிலைமை என்ன என்பது எங்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிலைமையைக் கண்காணித்து, பாதுகாப்பு அமைச்சகத்தோடு ஆலோசனை செய்து வருகிறார்” என்றது.

மூன்றாவது உலகப் போர் வரும் என அஞ்சப்படும் இந்த நேரத்தில், நினைத்தபடியே அமெரிக்காவின் செயலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் நிலைமை மிகவும் மோசமாயும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி