ஆப்நகரம்

ரயில் வெடி விபத்து; ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

லண்டனில் நடந்த சுரங்க ரயில் விபத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

TNN 16 Sep 2017, 5:04 am

லண்டனில் நடந்த சுரங்க ரயில் விபத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

Samayam Tamil is terrorism takes responsibility for london train accident
ரயில் வெடி விபத்து; ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு


லண்டனில் நேற்று காலை பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த சுரங்க ரயில் பெட்டியில் இருந்த பிளாஷ்டிக் வெடிகுண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.

இந்த வெடிகுண்டு விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டது. விபத்து குறித்த விசாரணை நடத்திய போலீசார, இது தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என கருதினர்.

இந்நிலையில், பிரபல ஐஎஸ் தீவிரவாத அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், லண்டனில் நடந்த சுரங்க ரயில் விபத்திற்கு தங்கள் அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்வதாக கூறியுள்ளது.

அடுத்த செய்தி