ஆப்நகரம்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

அமெரிக்க இசை நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

TNN 2 Oct 2017, 8:37 pm
லாஸ் வேகாஸ்: அமெரிக்க இசை நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Samayam Tamil is terrorists claims responsibility for the las vegas shooting that killed 50 people
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு!



அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ’மேண்டலே பே’ என்ற ஹோட்டல் அருகே இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் ஹோட்டலின் 32வது மாடியிலிருந்து கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து பொதுமக்கள் அலறியபடி அங்கிருந்து ஓடினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஸ்டீபன் பெட்டாக் என்ற நபர் போலீஸ் வருவதற்கு முன்பாகவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் 8 துப்பாக்கிகள் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புப் பொறுப்பெற்றுள்ளது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சில மாதங்களுக்கு முன்பே இஸ்லாம் மதத்திற்குக் மாறியதும் தெரியவந்துள்ளது.

IS terrorists claims responsibility for the Las Vegas Shooting that killed 50 people.

அடுத்த செய்தி