ஆப்நகரம்

நவாஸை சிறையிலே வைக்குமாறு மிரட்டல்: பாக்., நீதிபதி புகார்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடியும் வரை அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளை வெளியே அனுமதிக்கக் கூடாது என்று பாகிஸ்தான் உளவு அமைப்பு அழுத்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 7:41 pm
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடியும் வரை அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளை வெளியே அனுமதிக்கக் கூடாது என்று பாகிஸ்தான் உளவு அமைப்பு அழுத்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil 65090266


பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும் மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத் அடியாலா சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷாருத் சித்திக், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. (ISI) தமக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த அமைப்பு பொதுத்தேர்தல் முடியும் வரை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளும் சிறையில் இருக்கும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாக நீதிபதி சித்திக் புகார் கூறியுள்ளார்.

வரும் 25ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி