ஆப்நகரம்

இஸ்லாமிய தீவிரவாதிகளே குண்டுவெடிப்புக்கு காரணம்; பிலிப்பைன்ஸ் புகார்

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்புக்கு, இஸ்லாமிய தீவிரவாதிகளே காரணம் என, அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

TNN 3 Sep 2016, 7:33 pm
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்புக்கு, இஸ்லாமிய தீவிரவாதிகளே காரணம் என, அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
Samayam Tamil islamic militants blamed for deadly philippine blast
இஸ்லாமிய தீவிரவாதிகளே குண்டுவெடிப்புக்கு காரணம்; பிலிப்பைன்ஸ் புகார்


அந்நாட்டின் அதிபர் ரொட்ரிகோவின் சொந்த நகரமான தாவோவில் நேற்றிரவு சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில், 14 பேர் பலியாகினர். 70க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். முதலில், இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை என்றே கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அரசு மேற்கொண்ட விசாரணையில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளே காரணம் என்று, தெரியவந்துள்ளது. தாவோ உள்ளிட்ட பகுதிகளை பிரித்து, தனி நாடு கோரிவரும் இஸ்லாமிய தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், பிலிப்பைன்ஸ் அரசு புகார் கூறியுள்ளது. விசாரணையின் இறுதியில் இதுபற்றிய விரிவான உண்மை தெரியவரும் என்றும், விசாரணை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் முழுவதும் சீர்குலைவு காணப்படுவதாகவும், தீவிரவாத சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அரசு இயந்திரம் உள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி