ஆப்நகரம்

நைஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு..!

84 பேரை பலி கொண்ட பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

TNN 16 Jul 2016, 4:13 pm
84 பேரை பலி கொண்ட பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Samayam Tamil islamic state claims nice attack
நைஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு..!


இதுகுறித்து ஐ.எஸ் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற அமாக் செய்தி நிறுவனம் மூலம் ஐ.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,தங்கள் வீரர்களில் ஒருவர் ,எதிரி நாடுகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதன் மூலம் நைஸ் தாக்குதலில் ஈடுபட்டது ஐ.எஸ் இயக்கம் என்பது உறுதியாகியுள்ளது.ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பிரான்சில் 130 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் ஹொலாண்டே,சிரியா, ஈராக்கில் தீவிரவாத குழுக்களுக்கு எதிரான பிரான்சின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த,விடுமுறையில் இருக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் பணியில் இணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி