ஆப்நகரம்

ஜெர்மனி ரயில் தாக்குதல் சம்பவம் - ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஜெர்மனியில் ரயில் பயணிகள் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

TNN 19 Jul 2016, 4:42 pm
முனிச்: ஜெர்மனியில் ரயில் பயணிகள் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Samayam Tamil islamic state group claims responsibility for germany train attack
ஜெர்மனி ரயில் தாக்குதல் சம்பவம் - ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு


ஜெர்மனியின் தெற்கே உள்ள வூர்ஸ்பெர்க் நகரை நோக்கி, நேற்று இரவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த 17 வயது ஆப்கன் சிறுவன், திடீரென தன்னிடமிருந்த கோடாரியால் பொதுமக்களை தாக்கத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஆனால் கோடாரியால் தாக்கியதால் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஆப்கன் சிறுவன் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு ஐ.எஸ் அமைப்பின் கொடி இருந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் ஜெர்மனி ரயில் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்சிஸ் நடத்தியது போன்று, ஜெர்மனியிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி