ஆப்நகரம்

பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவு!

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 19 Apr 2021, 6:17 pm
கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய்த் தொற்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்து, உலக நாடுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தின. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் முடக்கப்பட்டது.
Samayam Tamil israel lifts public mask mandate and reopen schools
பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவு!



கொரோனா தடுப்பூசி

இதையடுத்து, கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைத் தொடங்கியதும் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக படிப்படியாக பலவிதமான செயல்களுக்கு உலக நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன. அதேசமயம், கொரோனாவில் இருந்து மீள தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனாவில் இரண்டாவது அலை பல நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது, அதிலிருந்தும் சில நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.

பாதிக்கும் மேல் தடுப்பூசி போட்டாச்சு

அந்தவகையில், இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து அந்த நாட்டில் மட்டும் 836,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் கொரோனாவுக்கான தடுப்பூசியை இரண்டு டோஸ்கள் பெற்று விட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கொரோனா இப்படித்தான் பரவுகிறது: ஆய்வில் பகீர் தகவல்!

பள்ளிகள் மீண்டும் திறப்பு

இந்த நிலையில், கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளையும் திறக்க இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், கொரோனாவுக்கான பெரும்பாலான கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் அரசு நீக்கி வருகிறது. மேலும், தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மே மாதம் முதல் அனுமதி வழங்கப்படும் என்று இஸ்ரேல் அரசு கடந்த வாரம் அறிவித்தது.

மாஸ்க் கட்டாயம் இல்லை

இஸ்ரேல் நாட்டில் பெரும் பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா நோய் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த நாட்டில் முககவசம் அணிவது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவித்தாலும், மூடிய இடங்கள், பெரிய கூட்டங்களின் போது முகக்கவசம் கட்டாயம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி