ஆப்நகரம்

எய்ட்ஸ் கிருமியை பரப்பிய நபருக்கு 24 ஆண்டுகள் ஜெயில்.!

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி கிருமியை 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு, 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

TNN 28 Oct 2017, 3:23 pm
எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி கிருமியை 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு, 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil italian man sentenced to 24 years for spreading hiv
எய்ட்ஸ் கிருமியை பரப்பிய நபருக்கு 24 ஆண்டுகள் ஜெயில்.!


இத்தாலியை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ. 33 வயதான இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட போது, இவருக்கு எச்.ஐ.வி தொற்று தெரிய வந்தது.



எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்த பின்னரும் 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் டலுடோ உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹார்ட் ஸ்டைல் என்ற புனைப்பெயரை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெண்களை டலுடோ தனது வலையில் வீழ்த்தியுள்ளார். டலுடோவால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களை தவிர்த்து மேலும் நான்கு பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்செயலை செய்த டலுடோவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

டலுடோவின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதல்ல என அவரின் வழக்கறிஞர் வாதாடினார், ஆனால் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. டலுடோ மீதான குற்றம் நிரூபிக்கபட்டதையடுத்து அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Italian man sentenced to 24 years for spreading HIV

அடுத்த செய்தி