ஆப்நகரம்

ஸ்வீட் எடு கொண்டாடு: ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஊரடங்கு முடிவை கொண்டாடிய மக்கள்

இத்தாலியில் ஊரடங்கு முடிந்ததையடுத்து இத்தாலியர்கள் இதனை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டாடினர்.

Samayam Tamil 28 May 2020, 8:45 am
இத்தாலியில் 3 மாத காலமாக நீடித்து வந்த ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இதனைக் கொண்டாட முடிவு செய்த இத்தாலி மக்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரவேற்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்


உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இருந்தபோதும், ஏராளமான உலக நாடுகள் ஊரங்குகளை விலக்கியும், பள்ளிகளைத் திறந்தும் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பி வருகின்றனர்.

இத்துடன் கொரோனாவுடன் தான் வாழ வேண்டும் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுமார் 3 மாதங்களாக இத்தாலியில் அமலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து இத்தாலியில் இயங்கி வரும் 39,000 ஐஸ்கிரீம் கடைகளில் 1,50,000 பேர் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

கொரோனா: தமிழ்நாடு தொடும் புதுப்புது உச்சங்கள்!


பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிட்டு புதிய வாழ்க்கையை வரவேற்கத் தயாராகிவரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி