ஆப்நகரம்

இத்தாலியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 475 பேர் பலி

இத்தாலியில் 35,713 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2020, 11:45 am

ஹைலைட்ஸ்:

  • கடந்த 24 மணிநேரத்தில் 475 பேர் கொரோனா வைரஸ் தொற்றால பலியாகியுள்ளனர்.
  • அந்நாட்டில் கொரொனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம முழுவதும் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்களைப பாதித்துள்ளது. 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின வுகான் நகரில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு தற்போது அந்த நகரில் முழுமையாகக் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸின் பேரழிவு மையங்களாக மாறியுள்ளன.

கொரோனாவைத் தோற்கடித்த 103 வயது இரும்பு மனுஷி!

குறிப்பாக மோசமான பாதிப்பைச் சந்தித்துவரும் இத்தாலியில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் கூடிவருகின்றன. அந்த நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 475 பேர் கொரோனா வைரஸ் தொற்றால பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.

லம்பாடி நகரத்தில் அதிகபட்சமாக 319 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். 35,713 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் பரவியது கொரோனா

அடுத்த செய்தி