உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 108 வயது முதிய கொரோனா நோயாளிக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த பாத்திமா நெக்ரெனிக்கு இப்போது 108 வயதாகிறது. வரும் ஜூன் 3ஆம் தேதியுடன் அவர் 109 வயதை தொடவிருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் வெற்றிகரமாக குணமடைந்தார்.
இந்நிலையில், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நேற்று பாத்திமாவுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தபின், “கடவுள் என்னை மறந்துவிட்டார்” என்று கூறினார்.
இவரை போலவே, ரோம் நகரை சேர்ந்த 90 வயதான சமி மொடியானோ என்பவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இத்தாலி இருக்கிறது.
இத்தாலியில் இதுவரை 11.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கொரோனாவால் 377 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இத்தாலியில் ஒட்டுமொத்தமாக 23.9 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டை சேர்ந்த பாத்திமா நெக்ரெனிக்கு இப்போது 108 வயதாகிறது. வரும் ஜூன் 3ஆம் தேதியுடன் அவர் 109 வயதை தொடவிருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் வெற்றிகரமாக குணமடைந்தார்.
இந்நிலையில், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நேற்று பாத்திமாவுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தபின், “கடவுள் என்னை மறந்துவிட்டார்” என்று கூறினார்.
இவரை போலவே, ரோம் நகரை சேர்ந்த 90 வயதான சமி மொடியானோ என்பவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இத்தாலி இருக்கிறது.
இத்தாலியில் இதுவரை 11.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கொரோனாவால் 377 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இத்தாலியில் ஒட்டுமொத்தமாக 23.9 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.