இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஞாயிற்றுக்கிழமை 431 பேர் இறந்துள்ளனர். இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்பட்டுத்தியிருக்கிறது. அந்த நாட்டில் சனிக்கிழமை 619 பேர் உயிரிழந்தார்கள். ஞாயிறுக்கிழமை இந்த எண்ணிக்கை 431 ஆகக் குறைந்துள்ளது.
இது மார்ச் 19ஆம் தேதிக்குப் பிறகு வந்திருக்கும் மிகக் குறைந்த ஒருநாள் பலி எண்ணிக்கை ஆகும்.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,092. இதுவே முந்தைய நாளில், 4,694 ஆக இருந்தது.
முதல் முதலில் பிப்ரவரி 21ஆம் தேதி இத்தாலியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. வேகமாக அந்த நாடு முழுவதும் பரவியதில், ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர்.
இப்போது, ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
இதுவரை இத்தாலியில் 19,899 பேர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளன்ர. 1,56,363 பேர் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையிலும் இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவும் ஸ்பெயினும் முதல் இரு இடங்களில் உள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்!
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து ஒன்பது நாட்ளில் கணிசமாகக் குறைந்துள்ளது. சனிக்கிழமை 3,381 பேர் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் ஞாயிறுக்கிழமை இந்த எண்ணிக்கை 3,343 ஆகக் குறைவுற்றது.
ஞாயிறு நிலவரப்படி, அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34,211 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. முந்தைய நாளில் இது 32,424 ஆக இருந்தது.
கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருப்பதால், அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்திருக்கிறது. ஏப்ரல் 13ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட ஊரடங்கு இப்போது மே 3 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நானும் மருத்துவம் பார்க்கிறேன் : அயர்லாந்து பிரதமர் முடிவு
இது மார்ச் 19ஆம் தேதிக்குப் பிறகு வந்திருக்கும் மிகக் குறைந்த ஒருநாள் பலி எண்ணிக்கை ஆகும்.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,092. இதுவே முந்தைய நாளில், 4,694 ஆக இருந்தது.
முதல் முதலில் பிப்ரவரி 21ஆம் தேதி இத்தாலியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. வேகமாக அந்த நாடு முழுவதும் பரவியதில், ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர்.
இப்போது, ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
இதுவரை இத்தாலியில் 19,899 பேர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளன்ர. 1,56,363 பேர் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையிலும் இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவும் ஸ்பெயினும் முதல் இரு இடங்களில் உள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்!
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து ஒன்பது நாட்ளில் கணிசமாகக் குறைந்துள்ளது. சனிக்கிழமை 3,381 பேர் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் ஞாயிறுக்கிழமை இந்த எண்ணிக்கை 3,343 ஆகக் குறைவுற்றது.
ஞாயிறு நிலவரப்படி, அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34,211 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. முந்தைய நாளில் இது 32,424 ஆக இருந்தது.
கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருப்பதால், அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்திருக்கிறது. ஏப்ரல் 13ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட ஊரடங்கு இப்போது மே 3 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நானும் மருத்துவம் பார்க்கிறேன் : அயர்லாந்து பிரதமர் முடிவு