ஆப்நகரம்

தெலுங்கானா முதல்வருக்கு டிரம்ப் மகள் கைப்பட எழுதிய நன்றி கடிதம்

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா தெலுங்கானா வந்த போது, அவரை சிறப்பாக வரவேற்ற, அம்மாநில முதல்வர் சந்திரபாபுவுக்கு தற்போது, தன் கைப்பட நன்றி கடிதம் எழுதியுள்ளார்.

TNN 19 Dec 2017, 12:51 am
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா தெலுங்கானா வந்த போது, அவரை சிறப்பாக வரவேற்ற, அம்மாநில முதல்வர் சந்திரபாபுவுக்கு தற்போது, தன் கைப்பட நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil ivanka trump pens down letter to thanks for telangana
தெலுங்கானா முதல்வருக்கு டிரம்ப் மகள் கைப்பட எழுதிய நன்றி கடிதம்


அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற, தொழில் முனைவோர் மாநாட்டில் தலைமை தாங்குவதற்காக வருகை புரிந்தார்.

170 நாடுகளில் இருந்து 15,00க்கும்மேற்றபட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில், இவாங்காவை, தெலுங்கானா முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரவேற்றார்.

இந்நநிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, இவாங்கா தன் கைப்பட நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவுக்கு வந்த போது, என்னை சிறப்பாக வரவேற்ற உங்களுக்கு என் அன்பான நன்றிகள் என்றும், பலக்னுமா மாளிகையில் நீங்கள் அளித்த விருந்து எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இமெயில், டுவிட்டர் என்று டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து வந்தாலும், ஆத்மார்த்தமாக இவாங்கா கைப்பட நன்றி கடிதம் எழுதிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி