ஆப்நகரம்

உடனடி ஓய்வில்லை; அடுத்தடுத்த திட்டங்களை அறிவிக்கத் தயாரான ’அலிபாபா’வின் ஜாக் மா!

தனது அடுத்தக்கட்ட திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக ஜாக் மா தெரிவித்துள்ளார்.

TIMESOFINDIA.COM 9 Sep 2018, 4:15 pm
பெய்ஜிங்: தனது அடுத்தக்கட்ட திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக ஜாக் மா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil jackma


சீனாவின் இணையதள ஜாம்பவனான அலிபாபா நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைவராக ஜாக் மா இருக்கிறார். இவர் தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அன்றே பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தொடக்கம் என்று ஜாக் மா தெரிவித்ததாக குறிப்பிட்டது. இதனை அலிபாபா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

இதற்கிடையில் தனது அடுத்தக் கட்ட திட்டங்கள் குறித்து நாளை அறிவிப்பு வெளியிட உள்ளதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் தொடர்ந்து நிர்வாகத் தலைவராக நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி நிறுவனமும் அலிபாபாவிற்கு சொந்தமானது தான். மேலும் கூறுகையில், நிறுவனத் தலைமையில் இளைய தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டம் இயற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு, தனது 18 நண்பர்களிடம் இருந்து 60,000 டாலர்கள் உதவியாகப் பெற்று, அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார். முன்னதாக ஆங்கிலா ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. 2013ல் அலிபாபா குழுமத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகினார்.

Jack Ma to unveil succession plans, not imminent retirement says SCMP.

அடுத்த செய்தி