ஆப்நகரம்

மலேசியாவில் முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு.!

தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் முயற்சியாக, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, மலேசியாவில் நடைபெற உள்ளது.

TNN 1 Dec 2017, 12:09 pm
தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் முயற்சியாக, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, மலேசியாவில் நடைபெற உள்ளது.
Samayam Tamil jallikattu game introduced malaysia in january 2018
மலேசியாவில் முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு.!


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, முதல்முறையாக மலேசியாவில் வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

மலேசியாவில் உள்ள களப மைதானத்தில், ஜனவரி 7ஆம் தேதி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் மலேசியாவை சேர்ந்த 20 காளைகள் பங்கேற்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள், காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

மலேசியாவில் நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 15 மாநில வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் முயற்சியாக, இந்த விளையாட்டு மலேசியாவில் நடத்தப்படுகிறது.

மலேசியாவைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் இதுபோன்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடத்தப்பட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி