ஆப்நகரம்

கண்ணாடி புட்டிக்குள் குழந்தைகள் உடல்: அதிர்ச்சியில் ஜப்பான்

ஜப்பானில் வீடு புதுப்பிக்கும் பணியின் போது தரைக்கு அடியில் கண்ணாடி புட்டிகளுக்குள் இருந்த குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

Samayam Tamil 13 Mar 2018, 11:24 am
ஜப்பானில் வீடு புதுப்பிக்கும் பணியின் போது தரைக்கு அடியில் கண்ணாடி புட்டிகளுக்குள் இருந்த குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
Samayam Tamil japan baby body found in glass jars in ground floor
கண்ணாடி புட்டிக்குள் குழந்தைகள் உடல்: அதிர்ச்சியில் ஜப்பான்


ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் வீடு ஒன்றை புதுப்பிக்கும் பணி நடந்துள்ளது. இந்த வீடு கடந்த 3 வருடங்களாக யாரும் பயன்படுத்தாத நிலையில் இருந்துள்ளது. மருத்துவரிடம் இருந்த வீட்டை சமீபத்தில் ஒருவர் வாங்கி புதுபிக்கும் பணியில் ஈடுபட்டார்.

வீட்டை புதுபிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளா்கள் வீட்டின் அடிபகுதியில் 4 கண்ணாடி புட்டிகளை எடுத்துள்ளனர். அந்த புட்டிகளில் குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அதில் தொப்பிள் கொடிகள் இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த விட்டின் புதிய உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் வேதிப்பொருள் பயன்படுத்தி குழந்தையின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக தொியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜப்பான் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி