ஆப்நகரம்

ஜப்பானை உலுக்கிய பாலியல் வழக்கு...

பெண் செய்தியாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்குச் சாதகமாக அதிரடி தீர்ப்பை ஜப்பான் நீதிமன்றம் அளித்துள்ளது.

Samayam Tamil 24 Dec 2019, 1:23 pm
ஜப்பான் நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் மெச்சிக் கொள்ளும் வகையில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
Samayam Tamil japan


ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர் சிசோரி இடோ. வயது 30. சிசோரியை ஜப்பான் நாட்டின் நோரியுக்கி யாமாகுச்சி (53), என்பவர் 2015ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சிசோரி இடோ புகார் அளித்த போதும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தடுப்பு மையம்: உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன?

இதனால், சிசோரி பகிரங்கமாகத் தெருவில் இறங்கிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து, சிசோரியின் குற்றச்சாட்டு 2017ஆம் ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

அதே வேளையில் சிசோரி குற்றம் சாட்டிய நபர் ஜப்பான் பிரதமர் சின்ஜோ ஏபின் நெருங்கிய நண்பர். இதனால் தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தில்தான், சிசோரி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நாத்தியம் பேசிய பாகிஸ்தான் பேராசிரியருக்கு மரண தண்டனை

வழக்கு விசாரணையில், சிசோரியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற நோரியுக்கி பாலியல் வன்புணர்வு செய்தது நிரூபிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு விசாரணையைத் தொடங்கிய டோக்கியோ மாவட்ட நீதிமன்றம், அதன் தீர்ப்பை நேற்று வழங்கியது.

அதன்படி, ஜப்பான் நாட்டில் பாலியல் வழக்குக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனையாகக் குற்றவாளிக்கு 30 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பாலியல் வழக்கு குற்றவாளிக்கு அபராதம் விதித்து டோக்கியோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எனினும், இந்த தீர்ப்பு தனக்குச் சாதகமாக வந்துள்ளது என சிசோரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி