ஆப்நகரம்

இனி பிளாஸ்டிக்கையே சாப்பிடலாம்: அசத்தல் மேட்டர்!

மனிதர்களும் சாப்பிடக்கூடிய பிளாஸ்டிக்கை ஜப்பானை சேர்ந்தவர் உருவாக்கியுள்ளார்.

Samayam Tamil 22 Oct 2020, 4:44 pm

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்துகள் ஒருபுறம் இருக்க, வன விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் என பலருக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பிரச்சினையாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியாத சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
Samayam Tamil Plastic


வன விலங்குகள், கடன் வாழ் உயிரினங்கள் உணவுடன் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து தவறுதலாக தின்றுவிட்டு அவதிப்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, சாப்பிடக்கூடிய பிளாஸ்டிக்கை ஜப்பானை சேர்ந்தவர் உருவாக்கியுள்ளார்.

ஜப்பான் நாட்டின் நாரா நகரத்தை சேர்ந்தவர் ஹைட்டோஷி மட்சுகாவா. அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கேயே விட்டுவிட்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை மான்கள் தின்றுவிட்டு உயிரிழப்பது வாடிக்கையாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் மரணம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

நாரா பகுதியில் ஏராளமான மான்கள் இருக்கின்றன. ஜப்பானின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் நாராவும் ஒன்று. மான்கள் இறப்புக்கு தீர்வு காண்பதற்காக ஷிககாமி என்ற பிளாஸ்டிக் பொருளை ஹைட்டோஷி மட்சுகாவா உருவாக்கியுள்ளார்.

நெல் உமி, பால் ஆகிய இயற்கையான பொருட்களை கொண்டு இந்த பிளாஸ்டிக் உருவாக்கப்படுகிறது. இவற்றை மான்கள் மட்டுமல்லாமல் மனிதர்களும் சாப்பிடலாம் என சோதனையில் நிரூபணமாகியுள்ளது. இந்த பிலாஸ்டிக்கை கடைகளில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மான்கள் இறப்புக்கு முடிவுகட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி