ஆப்நகரம்

ஜப்பான் பிரதமர் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!!

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அதிக காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Samayam Tamil 21 Nov 2019, 6:59 pm
ஜப்பானில் மிக நீண்ட காலமாக பிரதமர் பொறுப்பை வகித்து வருபவர் என்ற சாதனையை ஷின்ஸோ அபே நிகழ்த்தியுள்ளார்.
Samayam Tamil ssj


ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்ஸோ அபே பொறுப்பேற்று. புதன்கிழமையுடன் (நேற்றுடன்) 7 ஆண்டுகள் 9 மாதங்கள் நிறைவடைகிறது. இதன் மூலம் அந்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து வரும் பிரதமர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர், இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக ஜப்பானின் முன்னாள் பிரதமர் டரோ கட்சுரா இருந்து வந்தார். அவர் 1901 ஆம் ஆண்டு முதல் 1913 -ஆம் ஆண்டு வரை, மூன்று முறை பிரதமராக பொறுப்பு வகித்துள்ளார்.

இந்தியாவுக்கு 100 கோடி டாலருக்கு MK 45 துப்பாக்கி விற்க அமெரிக்கா சம்மதம்

ஷின்ஸோ அபேவின் பதவிக் காலம் 2021 வரை உள்ள நிலையில், டரோவின் சாதனையை 'அபே' தற்போது முறியடித்துள்ளார்.

அத்துடன், ஜி 7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமராக பொறுப்பு வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையையும் ஷின்ஸோ அபே பெற்றுள்ளார். கடநத 2005- ஆம் ஆண்டு முதல் ஜெர்மன் அதிபராக உள்ள ஏஞ்சலா மெர்கல், ஜி 7 நாடுகளில், நீண்ட காலம் பிரதமராக உள்ளவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி