ஆப்நகரம்

20 நொடிக்கு முன்னாடி வந்ததற்கு மன்னிப்பா? இதல்லாம் அங்கதான் நடக்கும்!!

20 நொடிகள் ரயிலை முன்னதாக இயக்கியதற்காக ஜப்பான் நாட்டின் ரயில்வே இயக்குநர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ள சம்பவம் அந்த நாட்டின் காலம் தவறாமை மற்றும் அடக்கத்தையும் காட்டுகிறது.

TOI Contributor 17 Nov 2017, 4:29 pm
20 நொடிகள் ரயிலை முன்னதாக இயக்கியதற்காக ஜப்பான் நாட்டின் ரயில்வே இயக்குநர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ள சம்பவம் அந்த நாட்டின் காலம் தவறாமை மற்றும் அடக்கத்தையும் காட்டுகிறது.
Samayam Tamil japan railway deeply sorry after train leaves 20 seconds early
20 நொடிக்கு முன்னாடி வந்ததற்கு மன்னிப்பா? இதல்லாம் அங்கதான் நடக்கும்!!


இந்திய ரயில்வே பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். உலகிலேயே அதிக தொலைவிற்கு ரயிலை இயக்கும் பட்டியலில் இந்திய ரயில்வே நான்காவது இடத்தில் உள்ளது. அதாவது 68,525 கி.மீட்டர் தொலைவிற்கு ரயிலை இயக்குகிறது. 13,31,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவ்வளவு ஊழியர்களைக் கொண்டு இருந்தாலும், ரயிலை உரிய நேரத்திற்கு இயக்க முடிவதில்லை. எப்போதும் தாமதம்தான். இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது.

ஆனால், ஜப்பானோ அதி வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலை இயக்கி வருகிறது. அங்கு தாமதம் என்பதோ, ரயில் முன்னரே சென்று விட்டது என்ற கேள்விக்கே இடம் இல்லை. உரிய நேரத்தில் இயக்கப்படும்.

டோக்கியோ மற்றும் வடக்கு புறநகர் தலைநகரை இணைக்கும் சுகுபா எக்ஸ்பிரஸ் ரயில் மினாமி நகரேயமா ரயில் நிலையத்திற்கு 9:44:40க்கு வருவதற்கு பதிலாக 9:44:20க்கு வந்துள்ளது. அதாவது 20 நொடிகள் முன்னரே வந்துள்ளது.

இதற்கு மன்னிப்பு கேட்டு சுகுபா எக்ஸ்பிரஸ் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக யாரும் ரயிலை தவற விடவில்லை. அந்த நாட்டு மக்களும் காலம் தவறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி