ஆப்நகரம்

சர்வதேச குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!!

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 17 Jul 2019, 6:22 pm
மும்பை வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதியும், ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இவர் மீதான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil hafiz syed
சர்வதேச குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!!


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தீவிரவாத துறை இவரை கைது செய்துள்ளது. பாகிஸ்தானில் மட்டும் இவர் மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் இந்தியாவிலும் மும்பை குண்டு வெடிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தார்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் போலீசார் இவர் மீது சட்டத்திற்கு புறம்பாக பணம் கையாளுதலின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து சயீத் கைது செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பு நிறைந்த கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக குஜ்ரன்வாலா பகுதியில் இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக செல்லும்போது சயீத் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து சயீத்தின் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவித்து அந்த நாடு தேடி வருகிறது. மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சயீத் குற்றம்சாட்டப்பட்டு உள்ளார். இந்த குண்டுவெடிப்பில் 166 பேர் பலியாகி இருந்தனர்.

அடுத்த செய்தி