ஆப்நகரம்

காஷ்மீரை ரத்தச் சகதியாக்கும் இந்தியா: நவாஸ் ஷெரீப் தாக்கு

காஷ்மீரை ஒரு போர்க்களமாக மாற்றி, இருநாடுகள் இடையிலான நட்புறவை இந்தியா சீர்குலைத்து வருவதாக, அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 5 Feb 2017, 2:56 pm
காஷ்மீரை ஒரு போர்க்களமாக மாற்றி, இருநாடுகள் இடையிலான நட்புறவை இந்தியா சீர்குலைத்து வருவதாக, அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil kashmir is core dispute between india and pakistan nawaz sharif
காஷ்மீரை ரத்தச் சகதியாக்கும் இந்தியா: நவாஸ் ஷெரீப் தாக்கு


ஆண்டுதோறும் பிப்ரவரி 5ம் தேதியை காஷ்மீர் ஒருமைப்பாட்டு தினமாக, பாகிஸ்தான் கடைப்பிடித்து வருகிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்று பேசியதாவது:

காஷ்மீர் பிரச்னை, கடந்த 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக, ஐ.நா., சபையிலும் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு, அடிப்படை உரிமைகள், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்காக, பாகிஸ்தான் தொடர்ந்து போராடி வருகிறது.

காஷ்மீர் மக்களை எங்களது சகோதர, சகோதரிகளாகப் பாவித்து வருகிறோம். தொடர்ந்து, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை பாகிஸ்தான் உதவிகள் செய்யும். காஷ்மீரில் தினசரி ரத்தச் சகதியை இந்திய அரசு நிகழ்த்தி வருகிறது. இதனை உடனடியாக, நிறுத்த வேண்டும்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு மேம்பட வேண்டுமானால், காஷ்மீர் பிரச்னையில் முதலில் தீர்வு காண வேண்டும். அதன்பிறகே, இருநாட்டிற்கும் இடையிலான நட்புறவு மேம்பட்டு, தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி ஏற்படும்.

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Upping the ante, Pakistan Prime Minister Nawaz Sharif on Sunday said Kashmir is the "core dispute" between India and Pakistan and the dream of peace and prosperity of the people of the region will remain elusive without resolving the issue.

அடுத்த செய்தி