ஆப்நகரம்

லண்டன் இளவரசர் தம்பதியருக்கு 3 வது குழந்தை பிறந்தது!

லண்டன் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு 3 வது குழந்தை பிறந்ததுள்ளதாக பிரட்டன் அரச மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 23 Apr 2018, 8:46 pm
லண்டன் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு 3 வது குழந்தை பிறந்ததுள்ளதாக பிரட்டன் அரச மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Samayam Tamil kate-middleton-prince-william-reuters


லண்டனர் இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார். இவரது மனைவி கேட் மிடில்டன். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், தற்போது மூன்றாவது பேறாக, ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பிரட்டன் அரச மாளிகை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் அரச குடும்பத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில், பிரிட்டன் நேரப்படி இன்று காலை 11.01 மணிக்கு கேட் மிடில்டனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவும், அதன் எடை 8 பவுண்ட் 7 அவுன்ஸ் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இளவரசி கேட் மிடில்டனின் பிரசவ நேரத்தின் போது, அவருக்கு உறுதுணையாக இளவரசர் வில்லியமும் அவர் உடனிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், மூன்றாவது குழந்தை வருகையால், எலிசபெத் மகராணியார் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி