ஆப்நகரம்

பாலியல் பொம்மையை திருமணம் செய்து கொண்ட பாடி பில்டர்!

கஜகஸ்தானைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மை ஒன்றை 18 மாதங்களாக காதலித்து இறுதியில் அதனை திருமணம் செய்து கொண்டுள்ளார்

Samayam Tamil 29 Nov 2020, 2:48 pm
காதலுக்கு கண் இல்லை, வயது இல்லை, சாதி மதம் இல்லை, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற சொல்லாடல்களை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இவையெல்லாம் உண்மையா இல்லையா என்பது அதனை உணர்ந்து பார்த்தவர்களுக்குதான் தெரியும். அந்த வகையில், கஜகஸ்தானைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மை ஒன்றை காதலித்து திருமணம் செய்து அதனை நிரூபித்துள்ளார்.
Samayam Tamil kazakhstan bodybuilder married his sex doll
பாலியல் பொம்மையை திருமணம் செய்து கொண்ட பாடி பில்டர்!



பாலியல் பொம்மையுடன் காதல்

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்தவர் யூரி டோலோச்ச்கோ. பாடி பில்டரான இவர், தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திய பொம்மையுடன் 18 மாதங்கள் டேட்டிங் செய்து, அந்த பொம்மையை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் பொம்மைக்கு மார்கோ என்று பெயரிட்டுள்ள அவர், அப்பொம்மையிடம் கடந்த ஆண்டு தனது காதலை சொல்லியுள்ளார். இதையடுத்து, அந்த பொம்மையை தற்போது யூரி டோலோச்ச்கோ திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாம்பை திருமணம் செய்து கொண்ட பெண்

பாலியல் பொம்மையான மார்கோவின் உள்ளே ஒரு மென்மையான ஆன்மா இருப்பதாக கூறும் யூரி தனது திருமண வாழ்க்கையை அதோடு தற்போது ஆரம்பித்துள்ளார். அவரது இந்த நூதன திருமணம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் பொம்மை போன்ற உயிரற்ற அல்லது உயிருள்ள ஜீவ ராசிகளை திருமணம் செய்து கொள்வது இது முதன் முறை அல்ல. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2006ஆம் ஆண்டு பாம்பு ஒன்றை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், 15 ஆண்டுகால காதலுக்கு பின்னர் டால்பின் ஒன்றை இஸ்ரேலில் ஆங்கிலேய பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். ஆட்டுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்த சூடான் நாட்டை சேர்ந்தவர் அந்த ஆட்டை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தன்னை தானே திருமணம் செய்து கொண்டவர்கள்

முன்னதாக, பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் டியோகோ ரபேலோ (33) என்பவர் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது. இதுவும் முதன்முறை அல்ல, இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டில் சீனாவை சேர்ந்த ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். யதார்த்தத்தின் மீதான அதிருப்தி காரணமாக இவ்வாறு செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். 2010ஆம் ஆண்டு தனக்கு வரண் கிடைக்காததால் தைவானை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

அடுத்த செய்தி