ஆப்நகரம்

செக்ஸ் பொம்மையுடன் வாலிபர் திருமணம்: பொம்மை உடைந்ததால் நடந்த விபரீதம்!

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த வாலிபர் பொம்மை உடைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Dec 2020, 7:29 pm
செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட வாலிபர், திடீரென பொம்மை உடைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பொம்மைக்கும் மனம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kazakhstan bodybuilder who married sex doll says she is broken
செக்ஸ் பொம்மையுடன் வாலிபர் திருமணம்: பொம்மை உடைந்ததால் நடந்த விபரீதம்!


புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள் இவைதான்!

​பொம்மைக்கு லவ் புரபோசல்

கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாடிபில்டர் யூரி டொலோச்கோ. இவர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மார்கோ என்ற செக்ஸ் பொம்மையிடம் தனது காதலை தெரிவித்தார்.

திருமணத்தை கெடுத்த கொரோனா

இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

​மீண்டும் தடை

மார்ச் மாதம் கைவிட்டுவிட்டதால் அக்டோபரில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திருநங்கைகள் போராட்டத்தின்போது யூரி டொலோச்கோ தாக்கப்பட்டதால் மீண்டும் திருமணம் தள்ளிப்போனது.

​ஒருவழியாக திருமணம் ஓகே

நீண்ட காத்திருப்புக்கு பின் நவம்பர் மாதம் விருந்தினர்கள் முன்னிலையில் மார்கோ செக்ஸ் பொம்மையை யூரி டொலோச்கோ மணந்துகொண்டார். இந்த செய்தி உலகளவில் பரவி இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்தன.

​திடீர் சோகம்

திருமணம் முடிந்து சுமார் ஒரு மாதகாலம் ஆகியுள்ள நிலையில், மார்கோ பொம்மை திடீரென உடைந்துவிட்டதாக யூரி டொலோச்கோ வேதனை தெரிவித்துள்ளார். இப்போது பொம்மையை சீரமைப்பதற்காக கொடுத்துள்ளார். மார்கோ நலமுடன் திரும்ப வேண்டுமென யூரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

​அவளுக்கு அதுதான் பிடிக்குமாம்

மார்கோ குறித்து யூரி பேசியபோது, “அவளால் தானாக நடக்க முடியாது. யாராவது உதவி செய்ய வேண்டும். அவளுக்கு சமைக்க தெரியாது. ஆனால், ஜார்ஜியா உணவுகள் பிடிக்கும். அவளுக்கு பிடித்த உணவு கிங்கலி. அவளுக்குள் ஒரு மெல்லிய மனம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி