ஆப்நகரம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன் எழுத்தாளருக்கு அறிவிப்பு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டன் எழுத்தாளர் கசுவோ இசிகுரோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 5 Oct 2017, 5:08 pm
ஸ்டாக்ஹோம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டன் எழுத்தாளர் கசுவோ இசிகுரோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kazuo ishiguro wins the nobel prize in literature
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன் எழுத்தாளருக்கு அறிவிப்பு!


பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதில் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகள் அடங்கும்.

நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவம், பின்பு இயற்பியல், வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2017ஆம் ஆண்டின் இலக்கிய நோபல் பரிசு பிரிட்டன் எழுத்தாளர் கசுவோவிற்கு வழங்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் நாகசாகியில் பிறந்தவர் கசுவோ இசிகுரோ. பின்னர் இங்கிலாந்து குடியேறிய அவர், ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவரின் எழுத்தாற்றலை கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதின் மூலம் அவருக்கு ரூ.7 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

Kazuo Ishiguro wins the Nobel prize in literature.

அடுத்த செய்தி