ஆப்நகரம்

சிங்கப்பூர் மக்களுடன் செல்பி எடுத்த கிம்

சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசினர். வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்த சந்திப்பு சென்டோசா தீவில் இன்று நடைப்பெற்றது.

Samayam Tamil 12 Jun 2018, 3:41 pm
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசினர். வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்த சந்திப்பு சென்டோசா தீவில் இன்று நடைப்பெற்றது.
Samayam Tamil DfaiKGTVAAUgoKI


இந்தச் சந்திப்புக்காக கிம் ஜான் உன் இரு நாள்களுக்கு முன்பே சிங்கப்பூர் வந்தார். இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் பல சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றார்.

அங்கு அவர் சந்தித்த பொதுமக்களுடன் இணைந்து செல்ஃபிக்கு போஸ்கொடுத்தார். உடனே சிங்கப்பூர் அமைச்சர்கள் சிலரும் கிம்முடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
பின் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தான் கிம்முடன் எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி