ஆப்நகரம்

அடிக்குற அடியில 5 நிமிசத்துல காலி; உள்ள வருவ? அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா!

அமெரிக்க உள்ளே வர முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

TNN 20 Oct 2017, 1:22 pm
சியோல்: அமெரிக்க உள்ளே வர முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.
Samayam Tamil kim jong un warns us army in korean island
அடிக்குற அடியில 5 நிமிசத்துல காலி; உள்ள வருவ? அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா!


உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி, உலக நாடுகளை அதிர வைத்தது.

இதனால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திய பாடில்லை. இதனால் அச்சம் கொண்டுள்ள தென் கொரியாவிற்கு ஆதரவாக, அமெரிக்கா களமிறங்கியுள்ளது.

இருநாட்டு படைகளையும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. அமெரிக்க போர்க் கப்பல் ஒன்றும் கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தும் களத்தில் இறங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், கிம் ஜாங் உன்னிற்கும் கடுமையான வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தை போர்ச் சூழலுக்கு அமெரிக்கா கொண்டு செல்கிறது என்று கிம் ஜாங் உன் குற்றம்சாட்டியுள்ளார். ஒருவேளை தங்கள் நாட்டிற்குள் அமெரிக்கா நுழைந்தால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த சூழலில் ஹிலாரி கிளிண்டன், விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

Kim Jong Un warns US army in Korean island.

அடுத்த செய்தி