ஆப்நகரம்

பாகிஸ்தான் அரசுக்கு குல்பூஷன் ஜாதவ் நன்றி

தனது தாய் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதியளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாாி குல்பூஷன் ஜாதவ் நன்றி தொிவித்துள்ளாா்.

TOI Contributor 26 Dec 2017, 12:34 am
தனது தாய் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதியளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாாி குல்பூஷன் ஜாதவ் நன்றி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil kulbhushan jadhav meets his mother wife meeting a humanitarian gesture says pakistan
பாகிஸ்தான் அரசுக்கு குல்பூஷன் ஜாதவ் நன்றி


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் நகரில் உளவு பாா்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாாி குல்பூஷன் ஜாதவை அந்நாட்டு பாதுகாப்பு படையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். மேலும், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவா் தண்டனை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் குல்பூஷன் ஜாதவை சந்திக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினா் தொடா்ந்து கோாிக்கை வைத்த நிலையில் அதனை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. இதன் விளைவாக இந்தியா சா்வதோச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதனைத் தொடா்ந்து குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குல்பூஷன் ஜாதவின் தாயாரும், அவரது மனைவியும் திங்கள் கிழமை அவரை சந்தித்தனா். இந்த சந்திப்பை முன்னிட்டு இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

சுமார் அரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குல்பூ‌ஷன் ஜாதவ் கூறியுள்ளார். அரசுக்கு குல்பூ‌ஷன் ஜாதவ் நன்றி தெரிவிக்கும் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி