ஆப்நகரம்

குவைத் அரசின் அறிவிப்பால், மகிழ்ச்சியில் திளைக்கும் இந்தியர்கள்!

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பை நீட்டித்து, குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Feb 2018, 1:30 pm
குவைத் சிட்டி: வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பை நீட்டித்து, குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil kuwait extends amnesty period until april 22
குவைத் அரசின் அறிவிப்பால், மகிழ்ச்சியில் திளைக்கும் இந்தியர்கள்!


குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது.

இதன்மூலம் தங்கள் பெயரை சம்பந்தப்பட்ட தூதரகங்களில் பதிவு செய்தால், உடனே சொந்த நாட்டிற்கு திரும்ப ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு எந்தவித அபராதமோ, தண்டனையோ அளிக்கப்படாது.

இதையடுத்து இந்திய தூதரகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். முன்னதாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி உடன், தூதரக பதிவிற்கான காலக்கெடு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் பிப்ரவரி 22 என நீட்டிக்கப்பட்டு, தொடர்ந்து ஏப்ரல் 22 என நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பு விதிமீறல் பிரச்சனைகள் காரணமாக, நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குடியிருப்பு விவகாரத்துறையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக, வளைகுடா நாடுகள் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

Kuwait extends amnesty period until April 22.

அடுத்த செய்தி