ஆப்நகரம்

லேபில் ரெடியான கோழிக் கறி: இதென்ன புது கதையா இருக்கு?

லேபில் தயாரான கோழிக் கறியை பயன்படுத்தி சமைக்கப்பட்ட சிக்கன் நகட்டை அறிமுகப்படுத்துகிறது சிங்கப்பூரை சேர்ந்த உணவகம்.

Samayam Tamil 16 Dec 2020, 5:23 pm

பண்ணைகளில் இருந்து விலங்குகளும், பறவைகளும் கொள்முதல் செய்யப்பட்டு வீடுகளுக்கும், உணவகங்களுக்கும் இறைச்சி விநியோகமாவதை பார்த்திருப்போம். அண்மைக்காலமாக, புதிய தொழில்நுட்பம் மூலம் பரிசோதனைக்கூடத்தில் (லேப்) உருவாக்கப்பட்ட இறைச்சியை பயன்படுத்த டிமாண்ட் அதிகரித்துள்ளது.
Samayam Tamil Chicken nuggets


சிங்கப்பூரில் லேபில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை பயன்படுத்த அண்மையில் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த உணவகத்தில் லேப் இறைச்சியில் செய்யப்பட்ட உணவு அறிமுகமாக இருக்கிறது.

கொரோனாவை அழிக்க ஈசியான வழி: வீட்டிலேயே செய்யலாம்!

அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமான ஈட் ஜஸ்ட் என்ற உணவகம் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. இந்த உணவகம் சமைக்கும் சிக்கன் நகட்களில் லேபில் தயாரிக்கப்பட்ட கோழிக் கறியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறைச்சிக்காக கொலை செய்யப்பட்ட பறவைகள் இதில் பயன்படுத்தப்படாது.

இறைச்சிக்காக கால்நடைகளையும், பறவைகளையும் உற்பத்தி செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஒருபுறம், கால்நடைகளை வெட்டும்போது மீத்தேன் எரிவாயு வெளியாவதாக கூறப்படுகிறது. மறுபுறம், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை ஏற்படுத்துவது மற்றொரு சவால்.

Dhanush தனுஷ் தானா, நல்லா பார்த்தீங்களா, ஆமாம், அது தனுஷே தான்

எனவே, காலநிலை மாற்றத்தை சரிசெய்வதற்கான இலக்குகளை எட்டுவதில் முட்டுக்கட்டைகள் விழுகின்றன. இந்நிலையில், லேப் இறைச்சியை பயன்படுத்துவதன் மூலம், இறைச்சிக்காக காடுகளை அழிக்க வேண்டிய தேவை இருக்காது என்று ஈட் ஜஸ்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டெட்ரிக் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி